1 துதிக்கிறோம் உம்மை - வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் - உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே - பரனே
துந்துமி மாட்சிமைக்கே - பிதாவே.
2 சுதனே யிரங்கும் - புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த - தூயசெம்மறியே,
சுத்தா ஜெபங்கேளும் - பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் - கிறிஸ்தே.
3 நித்ய பிதாவின் - மகிமையில் நீரே,
நிமலாவியினோ - டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே - உன்னத
நேயருக் கர்ச்சனையே - ஆமேன்.
Copyright © rmc 2020