பாடல் -11 வந்தனம், வந்தனமே!
வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி
கொண்டிதமே! - இது
வரையில் எமையே வளமாய்க் காத்த
எம்துரையே, மிகத் தந்தனம்.
1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக்
கடையாளமே, - நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில்
தயைகூர், சுரர்பதியே.
2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து
தற்காத்ததுவே - எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!
3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும்
பெரிதே, சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே, உன்
சருவத்துக்குந் துதியே.
4. உந்தன் சர்வ ஞானமும்
எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும்
புகழ் துதி துதியே.
5. மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும்
எத்தனை - உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே.